பின்லாந்தில் கஜேந்திரகுமார் எம்.பி

0
127

அனைத்துலக இராஜதந்திர கட்டமைப்பின் ஒழுங்கமைப்பில், பின்லாந்து மனித உரிமைகளுக்கான சிறப்புத்தூதுவர் ரீனா ஜோர்டிக்காவிற்கும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்க்கும் இடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று பின்லாந்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பில், இலங்கை அரசினால் தமிழர் பிரதேசங்களில் நடாத்தப்படும், திட்டமிட்ட மனிதவுரிமை மீறல்கள், சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக காத்திரமான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

தமிழர் தாயகத்தில் நடைபெறும் மனிதவுரிமை சார்ந்த விடயங்களை, ஐரோப்பிய ஒன்றியமும் பின்லாந்தும் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், தமிழ் மக்கள் அமைதியான பாதுகாப்பான வாழ்க்கை வாழ்வதையே தாமும் விரும்புவதாகவும், ரீனா ஜோர்டிக்கா தெரிவித்துள்ளார்.