பிரான்ஸிலிருந்து திருகோணமலைக்குச் சுற்றுலா வந்த நபர், அலஸ்தோட்டம் பகுதியிலுள்ள, விடுதியொன்றில் தங்கியிருந்தவேளை,
சுகவீனமுற்று இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 57 வயதுடைய மைக்கல் மார்சல் என்பவரே உயிரிழந்தாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மனைவி உட்பட 44 பேருடன் சுற்றுலா வந்த இவர், நேற்றிரவுதிருகோணமலை- அலஸ் தோட்டம் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி இருந்த போது சுகவீனமுற்றதாகவும்
இதனை அடுத்து 1990 அவசர அம்பியூலஸ் வண்டி மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மரணம் தொடர்பிலான விசாரணைகளை உப்பு வெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.