புதிதாக நியமிக்கப்பட்ட உயர்ஸ்தானிகர்கள் மூவரும், தூதுவர்கள் ஏழு பேரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தங்களது நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர்.
கண்டி ஜனாதிபதி மாளிகையில் நேற்று இந்த நிகழ்வு இடம்பெற்றது.
புதிதாக நியமிக்கப்பட்ட உயர்ஸ்தானிகர்கள் திரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசு, உகண்டா குடியரசு மற்றும் சீஷெல்ஸ் குடியரசு ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
இதேவேளை, பனாமா குடியரசு, பெல்ஜியம், ஹெலனிக் குடியரசு, சிரிய அரபுக் குடியரசு, பெரு குடியரசு, கொரியா குடியரசு மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளுக்கான தூதுவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கலாநிதி ரொஜர் கோபால் திரினிடாட் டொபாகோ குடியரசின் உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பேராசிரியர் ஜாய்ஸ் கே.கிகாபண்டா உகண்டா குடியசின் உயர்ஸ்தானிகரா நியமிக்கப்பட்டுள்ளார்.
லாலாட்டியானா அக்கோச் – சீஷெல்ஸ் குடியரசு உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எலிஜியோ எல்பர்டோ சலாஸ் டி லியோன் பனாமா குடியரசின் தூதுவராகவும், டிடியர் வாண்டர்ஹாசெல்ட் பெல்ஜியம் இராச்சியத்தின் தூதுவராகவும், டிமிட்ரியோஸ் ஐயோனோவ் ஹெலனிக் குடியரசின் தூதுவராகவும், நியமிக்கப்பட்டுள்ளனர்.
கலாநிதி பஸ்ஸாம் அல்-காதிப் சிரிய அரபுக் குடியரசு தூதுவராகவும், ஜேவியர் மானுவல் பாலினிச் வெலார்டே பெரு குடியரசு தூதுவராகவும் லீ மியோன் கொரியா குடியரசு தூதுவராகவும், இஸ்டிவான் ஷப்போ ஹங்கேரி தூதுவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்வில் வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரியவும் கலந்துகொண்டார்.