புதிய ஓய்வூதிய முறைமை அறிமுகப்படுத்தப்படும் – அனுப பெஸ்குவல்

0
164
எதிர்காலத்தில் புதிய ஓய்வூதிய முறைமையை அறிமுகப்படுத்துவதாக, சமூக மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்துள்ளார்.பங்களிப்பு ஓய்வூதிய முறைமையே அரசாங்கத்தினால், அறிமுகப்படுத்தப்பட உள்ளது. முறைமையை அமுலாக்கியுள்ள உலகின் பல நாடுகள், தற்போது சாதகமான பிரதிபலன்களைப் பெற்றுள்ளதாக, அண்மையில் களுத்துறை பகுதியில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோது அவர் குறிப்பிட்டுள்ளார்.