புதிய பாடசாலைகளுக்கு 10-ம் திகதிக்கு முன் விண்ணப்பிக்குக- கல்வி அமைச்சு

0
880

இந்த வருடம் வெளியான 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் மாவட்ட ரீதியாக வழங்கப்பட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களை 2021 ஆம் ஆண்டு ஆறாம் வகுப்புக்கு இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கமைய விண்ணப்பங்களை எதிர்வரும் 10 ஆம் திகதிக்குள் அனுப்பி வைக்குமாறு அறிக்கை ஒன்றை விடுத்து கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
விண்ணப்பங்களையும் ஆலோசனை பத்திரங்களையும் பாடசாலைகளின் அதிபர்களிடமிருந்து பெற்றோர்களுக்குப் பெற்றுக்கொள்ள முடியும்.

சரியாகப் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவங்களை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய பாடசாலைகளின் அதிபரிடம் கையளிக்க வேண்டும்.

கொரோனா பரவல் நிலைமையைக் கருத்தில் கொண்டு நாட்டில் மூடப்பட்டுள்ள பாடசாலைகளுக்கான விண்ணப்பங்களை தத்தமது பாடசாலைகளுக்கே பெற்றுக்கொள்ள சுகாதார வழிகாட்டல்களை முறையாகப் பின்பற்றி வலய கல்வி அதிகாரிகள் மற்றும் பாடசாலைகளின் அதிபர்களை நாடுமாறும் கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.