‘புதுமை மாதா சிலை நிறுவும் நிகழ்வு’ என்ற தலைப்பில், யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையக் கட்டடத்திற்குப் பின்புறமாக புதுமை மாதா சொரூபம் ஒன்று திறந்து வைக்கப்படவுள்ளதாகக் குறிப்பிட்டு, சமூக ஊடகங்களில் உலாவும் துண்டுப் பிரசுரம் போலியானது என்று யாழ். ஆயர் இல்லம் தெரிவித்துள்ளது.
துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிட்டுள்ளபடி, யாழ். மறை மாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசத்தினால் புதுமை மாதா சொரூபம் மே மாதம் முதலாம் திகதி, யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையக் கட்டடத்திற்குப் பின்புறமாகத் திறந்து வைக்கப்படவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளமை உண்மைக்குப் புறம்பானதொன்றாகும் என்றும், மதங்களுக்கிடையிலான நல்லுறவைக் குழப்பும் வகையில் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடும் தீய சக்திகள் குறித்து பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் ஆயர் இல்லம் குறிப்பிட்டுள்ளது.