தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வவுனியாவில் உள்ள இந்து ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இன்று இடம்பெற்றன.
சோபகிருது தமிழ் புத்தாண்டு இன்று மலர்ந்துள்ள நிலையில் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களும் விசேட வழிபாடுகளும் இடம்பெற்று வருகின்றன.
அந்தவகையில், வவுனியா, குட்செட் வீதி கருமாரி அம்மன் தேவஸ்தானத்தில் ஆலய பிரதம குரு பிரபாகரக் குருக்கள் தலைமையிலும், வைரவப் புளியங்குளம் சிறீ ஆதிவிநாயகர் ஆலயத்தில் ஆலய பிரதம குரு மயூர சர்மா குருக்கள் தலைமையிலும் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.
இதன்போது, மருத்து நீர் வைத்து நீராடி, புத்தாடை அணிந்து ஆலயத்திற்கு சென்ற பக்தர்கள் ஆலயங்களில் இடம்பெற்ற விசேட வழிபாடுகளில்
கலந்துகொண்டதுடன், புத்தாண்டு வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.







