2023 ஆம் ஆண்டின் புது வருட தினத்தில் கடமைகளை பொறுப்பேற்றுக் கொள்ளும் சம்பிரதாய நிகழ்வு கோறளைப்பற்று மேற்கு பிரதே சபையில் தவிசாளர்நௌபர் தலைமையில் நடைபெற்றது.
தேசிய கொடி ஏற்றலுடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டு தொடர்ந்து சத்தியப் பிரமான நிகழ்வு இடம்பெற்றது.பிரதேச சபை தவிசாளர் உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள்,உத்தியோகஸ்த்தர்கள் சத்தியப் பிரமான நிகழ்வில் பங்கேற்றனர்.
தவிசாளர் தமது உரையின் போது கடந்த வருடம் கொரோனா தொற்று நோய் மற்றும் பொருளாதார நெருக்கடி என சவால் மிக்க ஆண்டாக கடந்து சென்றதாகவும் இவ்வருடம் சகலருக்கும் நன்மை பயக்கும் ஆண்டாக இருக்கவேண்டும் என புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.