புத்தளத்தில் இருந்து காங்கேசன்துறை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளில் இன்று காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 50 – 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாமென, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
புத்தளத்திலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுமெனவும் அந்நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, தென் மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
அனர்த்தங்கள் தொடர்பில் 117 இற்கு அழைக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது.