புத்தளம் முதல் அம்பாந்தோட்டை வரையான கடற்பிராந்தியங்களுக்கு பலத்த காற்று தொடர்பான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.புத்தளம் முதல் கொழும்பு, காலியூடாக அம்பாந்தோட்டை வரையான கடற்பிராந்தியங்களில் பலத்த காற்று வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று காலை 08.30 முதல் நாளை காலை 08.30 வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்ககும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. குறித்த கடற்பிராந்தியங்களில் 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் இதனால் 2.5 முதல் 3 மீட்டர் வரை கடலலை எழக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களத்தினால் கடல்சார் மற்றும் மீனவ சமூகங்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.