தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான நடைமுறையை இந்த வருடம் முதல் திருத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதன்படி பரீட்சாத்திகளுக்கு பரீட்சை வினாத்தாளின் இரண்டாம் பாகம் முதலில் வழங்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வினாத்தாளின் பகுதி 01 பின்னர் வழங்கப்படும். இதன்கீழ் 2022, டிசெம்பர் 18, இல் திட்டமிடப்பட்ட 2022 தரம் 05 புலமைப்பரிசில் கால அட்டவணையின் அடிப்படையில் பகுதி 02, 60 பல தேர்வு மற்றும் குறுகிய பதில் கேள்விகளுடன் முற்பகல் 09.30 மணி முதல் 10.45 மணி வரை ஒரு மணி நேரம் 15 நிமிடங்களும் தொடர்ந்து பகுதி 01, 40 பல் தேர்வு கேள்விகள் முற்பகல் 11.15 மணி முதல் 12.15 மணி வரை ஒரு மணி நேர பரீட்சையாகவும் அமையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.