புலமைப்பரிசில் பரீட்சை குறித்து வெளியான அறிவிப்பு!

0
68

நடப்பு ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நேர அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் 15ஆம் திகதி புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும்.
வினாத்தாள் பகுதி -1 காலை 9.30 மணிக்கு ஆரம்பித்து முற்பகல் 10.45 மணிக்கு நிறைவடையும்.
வினாத்தாள் பகுதி – 2 முற்பகல் 11.15 மணிக்கு ஆரம்பமாகி மதியம் 12.15 மணிக்கு நிறைவடையும்.
பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகள் அந்தந்த பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பரீட்சார்த்திகளின் விவரங்களில் தவறுகள் காணப்பட்டால் எதிர்வரும் 9ஆம் திகதிவரை ஒன்லைன் முறையில் திருத்தங்களை செய்ய முடியும்.
அத்துடன், 2 ஆயிரத்து 849 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.