புலமைப்பரிசில் மீளாய்வில் 146 மாணவர்கள் அதிக புள்ளிகளுடன் சித்தி

0
92

ஐந்தாண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மீள் திருத்தத்திற்கு பின்னர் 146 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக, பரீட்சை ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையாத 25 ஆயிரத்து 157 மாணவர்களுக்கு அதிபர்கள் மீள் திருத்தத்திற்கு விண்ணப்பம் செய்ததாகவும், அவர்களில் 867 மாணவர்களின் மதிப்பெண் மட்டம் மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதன்படி, குறித்த 146 மாணவர்களை தேர்வு செய்யும் போது, ​​மாவட்ட வெட்டுப்புள்ளி மதிப்பெண் வரம்புகளை கருத்தில் கொண்டு மீண்டும் திருத்தம் நடத்தப்பட்டதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சையில் வெற்றி பெற்ற 146 மாணவர்களில் குறைந்த வருமானம் பெறும் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளதுடன், அவர்களின் மதிப்பெண்களின் அடிப்படையில் பிரபல பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.