புலமைப்பரிசில் முன்னோடி
வினாத்தாள்கள் வழங்கி வைப்பு

0
128

தரம் ஐந்து புலமை பரீட்சை எழுதும் மாணவர்களின் கல்வியினை மேம்படுத்தும் முகமாக கல்முனை இ-பெஸ்ட் கல்வி நிறுவனத்தின்அனுசரணையில் புலமைப்பரிசில் எழுதும் மாணவர்களுக்கான இலவச மாதிரி முன்னோடி வினாத்தாள்கள் வழங்கி வைக்கப்பட்டது.

கல்முனை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் உப தலைவர் அப்ராஸ் அவர்களின் ஒருங்கிணைப்பில்,கல்முனை கல்வி வலயத்தில் கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்திற்க்கு இ-பெஸ்ட கல்வி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஜவ்பர் அவர்களினால் புலமைப்பரிசில் இலவச மாதிரி முன்னோடி வினாத்தாள்கள் பாடசாலை அதிபர் அப்துல் ரசாக் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.