பெரியகல்லாறு உதயபுரம்
வடபத்திரகாளியம்மன் ஆலய உற்சவம்

0
185

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு பெரியகல்லாறு உதயபுரம் அருள்மிகு ஸ்ரீவடபத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு நேற்று கதவு திறத்தலுடன் ஆரம்பமானது.வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் திருச்சடங்கானது நேற்று மாலை பெரியகல்லாறு ஸ்ரீசிவசுப்ரமணியர் ஆலயத்திலிருந்து அம்பாள் எழுந்தருளல் செய்யப்பட்டு ஊர்வலமாக வடபத்திரகாளியம்மன் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டது.
விசேட பூஜைகள் நடைபெற்று பண்டைய மரபுகளை பேணியவகையில் கதவு திறத்தல் நடைபெற்று வருடாந்த திருச்சடங்கு ஆரம்பமானது.

ஆலயத்தின் பிரதமகுரு விஸ்வப்பிரம்மஸ்ரீ த.தவராசா பூசகர் தலைமையிலான பூசகர்கள் திருச்சடங்கினை நடத்தினர்
இன்றைய தினம் பெரியகல்லாறு ஸ்ரீசிவசுப்ரமணியர் ஆலயத்திலிருந்து வாழைக்காய் எழுந்தருளல் செய்யும் நிகழ்வு நடைபெறுவதுடன் 26ஆம் திகதி அன்னையின் ஊர்காவல் திரு உலா நடைபெறவுள்ளதுடன் 27ஆம் திகதி காலை சக்தி மகா யாகம் நடைபெறும்.

எதிர்வரும் 28ஆம் திகதி காலை தீமிதிப்பு திருச்சடங்கு நடைபெற்று ஆயுதபூஜையுடன் திருச்சடங்கு நிறைவுபெறும