இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயம், ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மீளாய்வு செய்வதற்காக இன்று இலங்கைக்கு வருகை தரவிருந்தார்.
ஆனால், அவரின் இந்த விஜயம் கடைசி நிமிடத்தில் ஒத்திவைக்கப்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இருநாட்கள் பயணமாக இன்றைய தினம் இலங்கை வரவிருந்த இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தவிருந்ததாகவும், நுவரெலியா மற்றும் திருகோணமலைக்கு செல்லவிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.