நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்காக நேற்றுவரை 17 அரசியல் கட்சிகளும் 16 சுயேச்சைக் குழுக்களும் தமது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.எதிர்வரும் 11ஆம் திகதியுடன் வேட்பு மனு தாக்கல் நடவடிக்கைகள் நிறைவடையவுள்ளன.
இதேவேளை நேற்றுவரை 246 சுயேட்சைக் குழுக்கள், கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், திகாமடுல்ல, திருகோணமலை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் அதிகளவு குழுக்கள் வைப்புகளை செய்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.