நாட்டில் தற்போதுள்ள பிரச்சினைகள் மற்றும் நெருக்கடிகளை பொதுமக்கள் உணர்ந்து கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்வதன் மூலமே இன்றைய நிலைமையை கடந்துசெல்ல முடியும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகதத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
மிக விரைவாக மக்களுக்கான தடுப்பூசிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
அன்றாடம் உழைத்துவாழும் மக்களை கருத்தில்கொள்ளாமல் செயற்படமுடியாது எனவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்