இன்று (17) முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை பொல்துவ சுற்று வட்டத்திற்கு அருகில் போராட்டம் நடத்துவதற்குத் தீர்மானித்துள்ள தரப்பினருக்கு நீதிமன்றம் உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது. இந்த காலப்பகுதியில் சத்தியாக்கிரகம் மற்றும் போராட்டமொன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ள போராட்டக் குழுவினருக்கு எதிராக நீதிமன்றம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒன்றிணைந்த தொழில்கோரும் பட்டதாரிகள் சங்கத்தின் தேசிய ஏற்பாட்டாளர் தம்மிக்க முனசிங்க,ஒன்றிணைந்த தொழில்கோரும் பட்டதாரிகள் சங்கத்தின் தென் மாகாண தலைவர் ரசிக பிரசாத், ஒன்றிணைந்த தொழில்கோரும் பட்டதாரிகள் சங்கத்தின் மத்திய மாகாண தலைவர் சுமித் ரத்னாயக்க, ஒன்றிணைந்த தொழில்கோரும் பட்டதாரிகள் சங்கத்தின் மேல்மகாகாண செயற்பாட்டுக் குழு உறுப்பினர் எஸ்.எம்.எல்.ரங்வல உள்ளிட்ட தரப்பினருக்கு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட நாட்களில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ள போராட்டம் மற்றும் சத்தியாக்கிரகத்தின் போதுஇ பொதுமக்கள் மற்றும் பாதசாரிகள் வீதிகளைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் எந்தவொரு வீதிகளையும் மறிக்கவோஇ போராட்டம் நடத்தவோ அல்லது வன்முறைச் செயல்களில் ஈடுபடவோ கூடாது என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மேலும்இ நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை மீறும் வகையில் மற்றும் அரச அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலான போராட்டங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன
எந்தவொரு நபருக்கும் இடையூறு ஏற்படாத வகையில் இந்தப் போராட்டம் நடத்தப்படுவதை அனைத்து பிரதிவாதிகளும் உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.