எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அவர் மீதான தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பீ.ஹரிசன் தெரிவித்துள்ளார்.இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய ஹரிசன், எதிர்க்கட்சித் தலைவர் இவ்விடயம் தொடர்பில் மௌனமாக இருப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.போதகர் ஜெரோம் பெர்னாண்டோ புத்தரை இழிவுபடுத்தும் வகையில் கருத்துகளை வெளியிட்டிருந்தார். இந்த போதகர் தொடர்பாக பலர் அறிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். போதகர் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மத, இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் இந்த போதகர் கூறுகின்ற அறிக்கைகள். எதிர்க்கட்சித் தலைவர் இதுபற்றி மௌனம் சாதிப்பது ஏன் என நாம் நினைக்கிறோம்.அவருக்கும் போதகருக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என சந்தேகிக்கிறோம்” எனவும் ஹரிசன் மேலும் தெரிவித்துள்ளார்.