போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞர், விளக்கமறியலில்!

0
131

யாழ்ப்பாணம் புத்தூர் சந்தி, தட்டாங்குளம் பகுதியில், இரண்டு கிராம் 550 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவரை, எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, சாவகச்சேரி நீதிமன்ற நீதவான் ஏ.யூட்சன், இன்று உத்தரவிட்டார். குறித்த பகுதியில், ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக, சாவகச்சேரி மதுவரி நிலைய அதிகாரிகளுக்கு கிடைக்கப் பெற்ற இரகசியாக தகவலை அடுத்து, இன்று காலை 9.00 மணியளவில், அப் பகுதியில் சோதனை மேற்கொண்ட போது, அப் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய சந்தேக நபரிடம் இருந்து, போதைப்பொருள் மீட்கப்பட்டது.
அதன் பின்னர், சந்தேக நபர், நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட வேளை, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.