போரதீவுப்பற்றில் பிரதேச கலாசார
இலக்கிய விழா

0
182

போரதீவுப்பற்று பிரதேச கலாசார பேரவையும்,கலாசார அதிகாரசபையும் இணைந்து நடத்திய பிரதேச கலாசார இலக்கிய விழா பிரதேசசெயலாளர் ராகுலநாயகி தலைமையில் வெல்லாவெளி கலாசார மத்தியநிலையத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்டஅரசாங்கஅதிபர் கருணாகரன் கலந்துகொண்டார். விசேட அதிதியாக புனர்வாழ்வு அமைச்சின் ஓய்வுபெற்ற மேலதிகசெயலாளர் பாஸ்கரன் உட்படகலாசாரஅதிகாரசபையின் உறுப்பினர்கள்,அதிகாரிகள்,கலைஞர்கள்,பொதுமக்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.

இங்கு போரதீவுப்பற்று பிரதேசமக்களின் கலை, கலாசார, பண்பாடு தொடர்பான ஆற்றுகைகளை வெளிப்படுத்தும் வகையிலான மருதம் எனும் சிறப்புமலர் வெளியீட்டுவைக்கப்பட்டது. அத்துடன் பிரதேச கலைஞர்களினால் நடனம்,பாடல்,நாடகம்,போன்றகலை நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதுடன் பிரதேசத்திலுள்ள மூத்தகலைஞர்களும் கௌரவிக்கப்ட்டனர்.