போராட்டத்திற்கு தயாராகும் தொழிற்சங்கங்கள்!

0
235

அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய வரித் திருத்தங்களுக்கு எதிராக, எதிர்வரும் 22ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் கறுப்பு வாரத்தை பிரகடனப்படுத்த அனைத்துத் துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. அரசாங்கத்தின் புதிய வரித் திருத்தங்கள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் கூடிய பெற்றோலியம், துறைமுகம், மின்சாரம், நீர், வங்கி மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த தொழில் வல்லுநர்கள் கறுப்பு வாரத்தை பிரகடனப்படுத்த தீர்மானித்துள்ளனர்.