போராட்டம் நசுக்கப்படுவதால் நாம் ஓய்ந்துவிடப் போவதில்லை – மணிவண்ணன்

0
199

இலங்கையில் தமிழர் போராட்டம் நசுக்கப்படுகின்ற காரணத்தால் ஓய்ந்துவிடப் போவதில்லை என யாழ். மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்தில் இன்று கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:

நீதி கிடைக்கும் வரை தமிழர் போராட்டம் எங்கும் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கும். இந்த செய்தியை இலங்கை அரசாங்கத்துக்கும், சர்வதேசத்துக்கும் தெளிவாகத் தெரிவிக்கின்றோம்.

புலம்பெயர் தேசங்களிலும் வடக்கு – கிழக்கிலும் தமிழ் மக்கள் உரிமைகளை வென்றெடுக்க போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர் எனத் தெரிவித்தார்.