போலித் தகவல்களை பரப்பி குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி- சவேந்திர சில்வா

0
274

வார இறுதியில் மேல் மாகாணத்தை முடக்கும் எண்ணம் எதுவுமில்லை என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தனிநபர்கள் சிலர் போலியான தகவல்களை பரப்புவதன்மூலம் மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்த முயல்கின்றனர் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொழும்பிலோ அல்லது மேல்மாகாணத்திலோ கிறிஸ்மஸ் வார இறுதியில் தனிமைப்படுதல் ஊரடங்கினை அறிவிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ள இராணுவத் தளபதி மேல்மாகாணத்திலிருந்து ஏனைய மாகாணங்களிற்கு செல்வதற்கான போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிக்கப்போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனவரி இரண்டாம் திகதி நள்ளிரவிலிருந்து மேல்மாகாணத்தில் முடக்கல் ஊரடங்கு அறிவிக்கப்படும் எனசமூக ஊடகங்களில் பரவலாக வெளியாகியுள்ள தகவல்களை சுட்டிக்காட்டியுள்ள இராணுவதளபதி அதிகாரிகள் கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள வேளை சில தனிநபர்கள் மக்கள் மத்தியில் பதற்றத்தை தூண்ட முயல்கின்றனர் என குற்றம்சாட்டியுள்ளார்.

ஊரடங்கு சட்டத்மோ முடக்கல்நிலையோ அறிவிக்கப்படாது என்ற போதிலும் அதிகாரிகள் தொடர்ந்தும் நிலைமையை கண்காணிப்பார்கள் என தெரிவித்துள்ள சவேந்திர சில்வா பொதுமக்களை விதிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

அனைத்தும் பொதுமக்களின் நடவடிக்கைகளிலேயே தங்கியுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் எங்கள் அதிகாரிகள் எச்சரிக்கையுடன் இருப்பார்கள் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள் ஆனால் பொதுமக்களின் ஆதரவு தேவை எனவும் தெரிவித்துள்ளார்.