பௌதீக வள அபிவிருத்தியுடன் இணைந்ததாக, ஆளணி வள அபிவிருத்தியையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சமூக உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்திக்கான கண்டி மாவட்ட கூட்டம் நேற்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தற்போதைய உட்கட்டமைப்பு வசதிகளையும் அபிவிருத்தி ஆளணி வளத்தையும் அபிவிருத்தி செய்வது அரசாங்கத்தின் அபிலாஷையென அமைச்சர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.