26.1 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மகள் நேற்று தற்கொலை, தந்தை இன்று தற்கொலை: சோகத்தில் குடும்பம்!

17 வயது சிறுமி ஒருவர் நஞ்சு அருந்தி நேற்று மாலை தற்கொலை செய்து கொண்ட நிலையில், சிறுமியின் தந்தையார் இன்று காலை வீட்டின் கூரையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவங்கேணி பிரதேசத்தில் இடம்பெற்றது.
களுவங்கேணி முதலாம் பிரிவு அக்கரைவீதியைச் சேர்ந்த 17 வயதுடைய கிருஷ்ணகுமார் கிறிஷ்கா, அவருடைய தந்தையான 53 வயதுடைய முத்து கிருஷ்ணகுமார் என்பவர்களே இவ்வாறு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த சிறுமி ஆடை தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வருவதாகவும் இளைஞன் ஒருவரை அவர் காதலித்துவரும் நிலையில் சிறுமியின் தந்தை காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சம்பவ தினமான நேற்று மாலை வீட்டில் நஞ்சு அருந்தி சிறுமி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனையடுத்து சிறுமி தற்கொலைக்கு காரணம் சிறுமியின் தந்தையார் என அந்தபகுதி அயலவர்கள் பேசத்தொடங்கியதையடுத்து சிறுமியின் தந்தையார் இன்று காலையில் வீட்டின் அறையின் உள்ள கூரையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஷ
பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles