உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள் நேற்று நள்ளிரவு நாடெங்கிலும் உள்ள தேவாலயங்களில் சிறப்பாக நடைபெற்றது. ஜேசுக்கிறிஸ்த்து உயிர்த்ததை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறை ஈஸ்டர் பெருவிழாவாக கிறிஸ்தவ மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
கிழக்கு மாகாணத்தில் கிறிஸ்தவ பெருமக்களின் தவக்காலத்தை முன்னிட்டு இறுதி நாள் உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள் இன்று மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல கிறிஸ்தவ தேவாலயங்களிலும் புனித ஞாயிறு நற்கருணை வழிபாடுகள் இடம் பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான வழிபாடு மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில்; நேற்றிரவு 12 மணிக்கு ஆலய விளக்குகள் அணைக்கப்பட்டு புது தீ முட்டி மெழுகுதிரி ஏற்றி உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.
மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப்ஆண்டகை தலைமையில் அருட்தந்தையர்களினால் இந்த உயிர்த்த ஞாயிறு விசேட வழிபாடுகள் நடாத்தப்பட்டன.
மெழுகுதிரி செபிக்கப்பட்டு நீரினுல் அமிழ்த்தப்பட்டு புனித நீர் பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டு ஆசிர்வதிக்கப்பட்டார்கள்.
இதன்போது உயிர்த்த ஞாயிறு விசேட கூட்டுத்திருப்பலி ஆயர் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன் பக்தர்களுக்கு ஆசிர்வாதமும் வழங்கப்பட்டது.
அத்துடன் 2019 ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு வழிபாடுகளின்போது உயிர்நீர்த்தவர்களுக்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன் அவரது ஆத்மசாந்திக்கான பிரார்த்தனையும் முன்னெடுக்கப்பட்டன.
சுகாதார நடைமுறைகளை பேணியவாறு நடைபெற்ற இந்த வழிபாடுகளில் அடியார்கள் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் கல்லடி டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலயத்தில் பங்குத்தந்தை லோரன்ஸ் லோகநாதன் தலைமையில் அருட்பணி ஜேம்ஸ் அடிகளார் இணைந்து உயிர்த்த ஞாயிறு விசேட திருப்பலியினை ஒப்புக்கொடுத்தனர் .
இந்த விசேட திருப்பலியில் பங்கு மக்கள் கலந்து சிறப்பித்துத்தடன் நண்பர்கள் ,குடும்ப உறவுகளுக்கு உயிர்த்த ஞாயிறு வாழ்த்துக்களையும் பகிர்ந்துகொண்டனர்