மட்டக்களப்பில் அமைக்கப்பட்ட மின் ஒளி வெசாக் கூடுகள் திறப்பு

0
681

கௌதம புத்தர் ஞானம் பெற்ற பௌர்ணமி வெசாக் தினம் இன்றாகும்.
பௌத்த மக்களின் வரலாற்று தினமான வெசாக் பௌர்ணமி தினம் இன்று மிக அமைதியாகவும் எளிமையான முறையிலும் அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது.

கொவிட் தொற்றின் காரணமாக விசேட நிகழ்வுகள் தடைசெய்யப்பட்டு அமைதியான முறையில் அலங்கார வெளிச்ச கூடுகள் அமைக்கப்பட்டு மின் ஒளியூட்டல் நிகழ்வுகளும் இன்று மாலை இடம்பெற்றன.

இதற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் விகாரைகள், பொலிஸ் நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் வெசாக் வெளிச்ச கூடுகள் அமைக்கப்பட்டு வீதிகளில் விளக்கேற்றப்பட்டு ஒளிவூட்டி வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய வளாகத்தில் அமைக்கப்பட்ட வெசாக் வெளிச்ச கூடுகள் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மா சிங்கவினால் கலாசார முறைப்படி மங்கள விளக்கேற்றி வெசாக் வெளிச்ச கூடுகளுக்கு ஒளிவூட்டி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட உதவி ஹபொலிஸ் அத்தியட்சகர் எல் ஆர்.குமாரசிறி, மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.கே.ஹெட்டிஹாராச்சி உட்பட பொலிஸ் உயர் அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுகாதார நடைமுறைக்கு அமைய நிகழ்வில் கலந்துகொண்டனர்.