மட்டக்களப்பில் இரத்ததான நிகழ்வு!

0
358

மட்டக்களப்பு ஈகள் வியூ அமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான நிகழ்வு இன்று மட்டக்களப்பு திஸ்ஸவீரசிங்கம் சதுக்கத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவுகின்ற இரத்த பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் வகையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க இரத்ததான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவு வைத்தியர் ரந்திம , இரத்த வங்கி பிரிவு பொறுப்பதிகாரி டி .ஜெயராஜ் , பொதுசுகாதார பரிசோதகர் பி. எம் .எம் .பைசல் , பொதுசுகாதார வெளிக்கள உத்தியோகத்தர் ஆர் அனுபிரதாப் , ,வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள், ஹெல்ப் ஹெவர் அமைப்பின் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கி வரும் ஈகள் வியூ அமைப்பானது ‘ வளர்ச்சியை நோக்கிய பயணம் ‘ எனும் கருப்பொருளில் மாவட்டத்தில் சமூக பொருளாதார அபிவிருத்தி வேளைத் திட்டங்களை முன்னெடுத்து வரும் செயல்பாட்டின் ஒரு அங்கமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவுடன் இணைந்த ஏற்பாட்டில் இரத்த தான நிகழ்வினை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.