உள்ளூராட்சி மன்ற உத்தியோகத்தர்களுக்காக நடத்தப்பட்ட ‘சமூகப் பொறுப்புக் கூறலும் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிபலிப்பும்’ எனும் தொனிப் பொருளிலான
இருநாள் செயலமர்வு நேற்று நிறைவடைந்தது.
மட்டக்களப்பு பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் செயலமர்சு இடம்பெற்றிருந்தது.
சர்வதேச தன்னார்வ அமைப்பான வீ-எபெக்ற் நிறுவனத்தின் அனுசரணையில், இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தினால் செயலமர்வு
ஒழுங்குபடுத்தப்பட்டது.
நகர சபைகள், பிரதேச சபைகளின் செயலாளர்கள், அவற்றில் பணியாற்றும் சன சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொது உறவு உத்தியோகத்தர்கள்,
முறைப்பாடுகளைக் கையாளும் உத்தியோகத்தர்கள் உட்பட சுமார் 35 அலுவலர்கள் இந்த செயலமர்வில் பங்குபற்றினர்.
செயலமர்வை சனசமூக அபிவிருத்தி உத்தயோகத்தரும் பயிற்றுவிப்பாளருமான சட்டத்தரணி அன்பழகன் குரூஸ் நடத்தினார்.
நிகழ்வில், பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ். பிரகாஸ், இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் இணைப்பாளர் தங்கராஜா திலீப்குமார் போன்றோரும்
பிரசன்னமாகியிருந்தனர்.