மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட பொதுமக்களுக்கான கொரோனா வைரஸ் தொற்றுக்கான விசேட தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்றைய தினம் மட்டக்களப்பு நகர் தேவநாயகம் மண்டபத்தில் முன்னெடுக்கப்பட்டது.
கொரோனா தொற்றுக் ஏதிராக முழுமையான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுதல் அவசியமாக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இன்றைய தினம் விசேட விதமாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஒழுங்கமைப்பில் விசேட தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையானது மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுகுணன் தலைமையில் இன்று முன்னெடுக்கப்பட்டது.
இன்றைய தினம் மட்டக்களப்பு நகர் தேவநாயகம் மண்டபத்தில் முன்னெடுக்கப்பட விசேட தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையில் பெருமளவான பொதுமக்கள் வருகை தந்து தங்களுக்குரிய அவசியமான தடுப்பூசியினை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.