26.9 C
Colombo
Thursday, September 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டக்களப்பில் பகுதியில் 12 நபர்களுக்கு கொரோனா

மட்டக்களப்பு கொக்குவில் பொதுசுகாதார பிரிவு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ரபிட் அன்டிஜன் பரிசோதனையில் 12 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வைத்தியர் கிரிசுதன் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஆய்வு கூட தொழில் நுட்பவியலாளர்களுடன் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து மட்டக்களப்பு பொதுசுகாதார பிரிவுக்குட்பட்ட கொக்குவில் பொது சந்தை பகுதியில் எழுந்தமானமாக 117 நபர்களுக்கு ரபிட் அன்டிஜன் பரிசோதனைகளும் 38 நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளும் இன்று முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது 117 நபர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட ரபிட் அன்டிஜன் பரிசோதனையில் 12 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொவிட்-19 வைரஸ் தொற்றின் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் ரபிட் அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles