மட்டக்களப்பில் புதிய மாவட்ட செயலக கட்டடம் திறந்து வைப்பு!

0
83

மட்டக்களப்பு – திராய்மடுவில் ஆயிரத்து 55 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மாவட்ட செயலக புதிய கட்டடத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை திறந்து வைத்தார்.

இன்று காலை மட்டக்களப்பிற்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மாவட்ட செயலக புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்.

தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் 13 பிராந்திய செயலகப் பிரிவுகளில் தகுதி பெற்ற 27 ஆயிரத்து 595 குடும்பங்களில் 192 குடும்பங்களுக்கு காணி உறுதி பத்திரங்களை ஜனாதிபதி வழங்கி வைத்தார்.

நாட்டில் 20 இலட்சம் பேருக்கு காணி உறுதிகளை வழங்குவதற்கான ‘உறுமய’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 192 குடும்பங்களுக்கு இவ்வாறு காணி உறுதி பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.