மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பொதுசுகாதார பிரிவுகளில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான பைஸர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பொது சுகாதார பிரிவுகளில் மூன்றாவது பைஸர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் 22ஆம் திகதி தொடக்கம் 26ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.கிரிசுதன் தெரிவித்துள்ளார்.
மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 48கிராம சேவையாளர் பிரிவுகளில் 16 நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.