தேசிய கணக்காய்வு நிறுவனத்தினால் வெளியிடப்படுகின்ற கணக்காய்வு நடைமுறைகளின் இறுதி கணக்கறிக்கையினை தயாரிப்பது தொடர்பான உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகத்தர்களுக்கான கணக்காய்வு தொடர்பான மூன்று நாள் பயிற்சி செயலமர்வு மட்டக்களப்பில் நடைபெறுகின்றது.
கிழக்கு மாகாண முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் கடமையாற்றும் கணக்காளர்களுக்கான இறுதி கணக்கறிக்கையினை தயாரிப்பது தொடர்பான கணக்காய்வு பயிற்சி செயலமர்வு மூன்று நாள் மட்டக்களப்பில் நடைபெறுகின்றது.
இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு முறைமைகள் ஐந்தொகைக் குறிப்புக்கள், நிலையான சொத்துக்களின் கணக்காய்வு போன்ற கணக்காய்வு நடைமுறைகளின் இறுதி கணக்கறிக்கையினை தயாரிப்பது தொடர்பாக பயிற்சி செயலமர்வாக நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.