மட்டக்களப்பில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி

0
433

நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாளாந்தம் கூலித்தொழில் ஈடுபடும் குடும்பங்களில் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளான குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆயித்தியமலை மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட புதுமுகத்துவாரம், நாவலடி ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளில் பயணத்தடை காரணமாக தொழில் பாதிப்புக்குள்ளான குடும்பங்களில் தெரிவு செய்யப்பட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் இன்று வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு கல்லடி டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலய பங்கு நன்கொடையாளர்களால் வழங்கப்பட்ட நிதி உதவியின் மூலம் எதவித் திட்டங்கள் வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு கல்லடி டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலய பங்கு தந்தை அருட்திரு லோரன்ஸ் லோகநாதன் அடிகளாரின் வழிகாட்டலின் கீழ் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள குறித்த குடும்பங்களுக்கு உலர்வுணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.