மட்டக்களப்பில் 15 கோரிக்கைகளை முன்வைத்து சுகாதாரத்துறையினர் பணிப்பகிஸ்கரிப்பு

0
401

இலங்கை அரசாங்கத்திடம் 15 கோரிக்கைகளை முன்வைத்து இன்று காலை தொடக்கம் பிற்பகல் வரையில் வைத்தியசாலைகளில் கடமையாற்றும் தாதியர்கள் உட்பட 16 அமைப்புகள் பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

கொவிட் காலத்தில் அர்ப்பணிப்புமிக்க சேவையினை தாதியர்கள் மற்றும் சுகாதார துறை ஊழியர்கள் முன்னெடுத்துவரும் நிலையில் சுகாதார திணைக்களத்தின் கீழ் உள்ள ஓரு துறைக்கு மட்டுமே அனைத்து வரப்பிரசாதங்களும் வழங்கப்படுவதாகவும் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

அரச தாதியர் சங்கம், அரச சுகாதார ஊழியர்கள் சங்கம் உட்பட பல சங்கங்கள் இன்றைய போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

தங்களது கோரிக்கைகள் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்படுவதாகவும் தமது கோரிக்கைக்கு முறையான பதில்கள் வழங்காவிட்டால் நாடு தளுவிய ரீதியில் தொடர்ச்சியான பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தினை நடாத்தவேண்டிய நிலையேற்படும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.