மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் மருத்து நீர் வழங்கும் பணிகள் முன்னெடுப்பு

0
142

தமிழ்-சிங்கள புத்தாண்டை கொண்டாடும் வகையில் இந்துக்கள் ஆலயங்கள் ஊடாக மருத்து நீர் வழங்கும் பணிகள் இன்று மாலை முதல் முன்னெடுக்கப்பட்டுள்ன.
தமிழ்-சிங்கள புத்தாண்டில் மருத்துநீர் தேய்ந்து ஆலயத்திற்கு சென்று வழிபடும் நடைமுறைகளை தமிழர்கள் பண்பாட்டு ரீதியான முன்னெடுத்துவருகின்றனர்.
கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இன்று மாலை தொடக்கம் மருத்துநீர் வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஆலயத்தின் வண்ணக்கர்கள் மற்றும் ஆலயத்தின் குருக்கள் ஆகியோரினால் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டதை தொடர்ந்து வண்ணக்கர்களினால் மருத்துநீர் வழங்கும் பணிகள்ஆரம்பித்துவைக்கப்பட்டன.
இதன்போது பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டு மருத்து நீர் பெற்றுச்செல்வதை காணமுடிகின்றது