மட்டக்களப்பு ஏறாவூரில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, சமைத்த உணவு வழங்கப்பட்டது

0
108

மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 400 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 225 பேருக்கு, சமூக நலன் அபிவிருத்தி ஒன்றியத்தால்,
சமைத்த உணவு வழங்கப்பட்டது.
வெள்ள நீர் தேங்கியுள்ளதால், வீடுகளில் சமையல் பணிகளை முன்னெடுக்க முடியாது தவிக்கும், குடும்பங்கள் இனங்காணப்பட்டு, அவர்களுக்கே
உணவு வழங்கப்பட்டது.
சவூதி,கட்டார்,குவைத் ஆகிய நாடுகளில் பணிபுரியும் தனவந்தவர்களின் உதவியுடன், இவ் உதவித் திட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.