மட்டக்களப்பு ஏறாவூரில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு, வீடுகளைத் திருத்தம் செய்வதற்கு 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா நிதியுதவி
வழங்கப்பட்டது.
ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பயனாளிகளுக்கே, நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலான, கிழக்கு மாகாண ஆளுநரிடம் விடுத்த
கோரிக்கைக்கு அமைய நிதியுதவி வழங்கப்பட்டது.
கிழக்கு மாகாண வீடமைப்பு அபிவிருத்தித் திணைக்களத்தின் ஊடாக வழங்கப்பட்ட நிதியை நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலான வழங்கினார்.
அத்தோடு தெரிவு செய்யப்பட்ட சில பயனாளிகளுக்கு மலசலகூடம் அமைப்பதற்கான நிதியுதவியும் வழங்கப்பட்டது.
கிழக்கு மாகாண வீடமைப்பு திணைக்கள தலைவர் இஸ்மாயில் ரனுஸூன் பங்களிப்புடன், காசோலைகள் வழங்கப்பட்டன.
ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத், ஏறாவூர் நகர சபை முன்னாள் தவிசாளர் நலீம் , வீடமைப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் என பலரும்
இதில் கலந்து கொண்டிருந்தனர்.