மட்டக்களப்பு ஏறாவூர்ப் படுகொலை தொடர்பில் நூலொன்று வெளியீடு

0
82

மட்டக்களப்பு ஏறாவூரில், ‘ஏறாவூர் படுகொலைகள் வரலாறும் பின்னணியும்’ எனும் நூல் நேற்று மாலை வெளியிட்டு வைக்கப்பட்டது.
ஏறாவூர் ஹூதாக்கள் ஞாபகார்த்த பேரவையினால், அலிகார் தேசிய பாடசாலை மண்டபத்தில் பேரவையின் தலைவர் எம்.எல்.அப்துல் லத்தீப் தலைமையில்
நூல் வெளியீட்டு விழா நடாத்தப்பட்டது.
1990ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் திகதி ஏறாவூரில் இடம் பெற்ற படுகொலைச் சம்பவம் அதன் பின்னணி தொடர்பாக இந்த நூலில் எழுதப்பட்டுள்ளது.
நூல் வெளியிட்டு நிகழ்வில், ஏறாவூர் பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜுத் உட்பட ஏறாவூர் பள்ளி வாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதிநிதிகள்,
காத்தான்குடி பள்ளி வாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
நூல் ஆய்வுரையை கலாநிதி ரவூப் ஸெய்ன் நழீமி நிகழ்த்தினார்.