மட்டக்களப்பு ஓந்தச்சிமடம் கிராமத்தில் 450 மீற்றர் நீளம் கொண்ட காளிகோயில் வீதி, கொங்றீட் வீதியாக புனரமைப்புச் செய்யப்படவுள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் 25 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
புனரமைப்புப் பணியை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்யை பிரசாந்தன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர்
லிங்கேஸ்வரன் ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.