மட்டக்களப்பு களுதாவளை விபுலானந்தா பாலர் பாடசாலை மாணவர்களின் கலாசார நிகழ்வும் பரிசளிப்பு விழாவும்,பாலர்பாடசாலை அபிவிருத்திச் சங்கத்
தலைவர் குணகேசரம்; தலைமையில் இடம்பெற்றது.
பாலர் பாடசாலை மாணவர்கள், வைத்தியர், சட்டத்தரணி, பொலிஸ், மதத் தலைவர்கள் போன்று ஆடைகள் அணிந்து அதிதிகளை
வரவேற்றனர்.
சிறார்களின் ஆடல், பாடல் நடனம், உள்ளிட்ட பலவகையான கலைத்துவப் படைப்புக்கள் மேடையேற்றப்பட்டதுடன், கலந்து கொண்ட பாலர் பாடசாலை சிறார்களுக்கு
பரிசில்களும், சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டன.