மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில், ஒரு இலட்சம் வீதிப் புனரமைப்புத் திட்டத்தில், புனரமைக்கப்பட்ட வீதிகள் மக்கள் பாவனைக்கு!

0
150

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் புனரமைக்கப்பட்ட வீதிகள், மக்கள் பாவனைக்கான திறந்து விடப்பட்டன.
பெருந்தெருக்கள், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன வீதிகளை மக்கள் பாவனைக்கு கையளித்தார்.
பல கோடி ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு ஊர்வீதி மற்றும் களுவாஞ்சிகுடி கண்ணகியம்மன் ஆலய வீதி
என்பனவே திறந்துவைக்கப்பட்டது.
ஒரு இலட்சம் கிலோ மீற்றர் வீதிகளை புனரமைக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், பெரியகல்லாறு ஊர்வீதி உட்பட பல வீதிகள் சுமார் 154 மில்லியன் ரூபாவில்
காபட் வீதியாக புனரமைக்கப்பட்டன.
களுவாஞ்சிகுடி கண்ணகியம்மன் ஆலய வீதி உட்பட பல வீதிகள் 143 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டது.
பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பா.சந்திரகுமார் கடந்த காலத்தில் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் இந்த வீதிகளுக்கு நிதி ஒதுக்கீடு
செய்யப்பட்டது.
வீதிகளின் திறப்பு விழா கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்றது.
நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கமலத், பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பா.சந்திரகுமார் , களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர்
திருமதி சிவப்பிரியா வில்வரெட்னம் உட்பட பலரும் திறப்பு விழாவில் கலந்துகொண்டனர்.