மட்டக்களப்பு காத்தான்குடியில் திருமண சீர்திருத்தப் பிரகடன மாநாடு

0
153

மட்டக்களப்பு காத்தான்குடியில் திருமண சீர் திருத்தப் பிரகடன மாநாடு நேற்று இரவு காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் நடைபெற்றது.
காத்தான்குடியில் தற்போது நடைபெற்று வரும் திருமண நடைமுறை ஒழுங்கில் மாற்றங்களை கொண்டு வருவதுடன், ஆடம்பரங்களில்லாமல் இஸ்லாமிய நடைமுறைக்கேற்ப திருமண வைபவங்களை நடாத்தும் வகையிலும், சீதனத்தை ஒழிக்கும் வகையிலும் இந்த திருமண சீர் திருத்தப் பிரகடனம் மேற்கொள்ளப்பட்டது.
காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை மற்றும் காத்தான்குடி பள்ளி வாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனமும் இணைந்து இந்த திருமண சீர் திருத்தப் பிரகடனம்
செய்யப்பட்டது.
திருமண சீர்திருத்தம் தொடர்பாக அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபையின் உப செயலாளரும், மாநாட்டின் ஒருங்கிணைப்பாளருமான
மௌலவி இல்ஹாம் பலாஹி பாட்டில் முன் வைத்ததுடன், சம்மேளன செயலாளர் சபீல் நழீமி அதனை பிரகடனம் செய்தார்.
காத்தான்குடி ஐம் இய்யத்துல் உலமா சபை தலைவர் மௌலவி ஹாரூன் றஷாதி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், காத்தான்குடி பள்ளி வாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன தலைவர் ரவூப் ஏ மஜீத், காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா செயலாளர் மௌலவி சவாஹிர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.