மட்டக்களப்பு காத்தான்குடியில்இராணுவத்தால் பயனாளிக்குவீடு கையளிப்பு

0
86

மட்டக்களப்பு காத்தான்குடியில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட வீடு நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டு பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.
இலங்கை இராணுவத்தின் 11ம் சிங்க ரெஜிமன்ட் படை அணியின் கட்டளையிடும் அதிகாரி மேஜர் டி.எம்.என்.பத்ம ஸ்ரீயின் மேற்பார்வையில் மற்றும் ஒருங்கிணைப்பின் கீழ் இராணுவ வீரர்களின் பங்களிப்பில் 243வது காலாட் படை அணியின் கட்டளை தளபதி பிரிகேடியர் கே.எம்.எஸ்.குமாரசிங்கவின் அழைப்பின் பேரில் 24ஆவது காலாட் படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி மேஜர் ஜெனரல் டபிள்யூ. சந்திர ஸ்ரீயினால் இவ்வீடு திறந்து வைக்கப்பட்டது.
சமயத் தலைவர்களின் பிரார்த்தனைகள் இடம்பெற்றதனைத் தொடர்ந்து சுமார் 45 லட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள குறித்த வீடு வீட்டின் பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.
காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் உட்பட முக்கியஸ்தர்கள், இராணுவ அதிகாரிகள் என பலரும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.