மட்டக்களப்பு காத்தான்குடி மில்லத் மகளிர் உயர்தர பாடசாலை பழைய மாணவிகளின் ஒன்றுகூடல்

0
199

மட்டக்களப்பு காத்தான்குடி மில்லத் மகளிர் உயர்தர பாடசாலையின் நூற்றாண்டை நோக்கிய பயணத்தில் பழைய மாணவிகளின் ஒன்று கூடல் நேற்று
கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது
பாடசாலையின் பழைய மாணவர்கள் சங்கம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் என்பவற்றின் ஏற்பாட்டில் அதிபர் திருமதி ஜெசிமா முசம்மில் தலைமையில்
நடைபெற்ற ஒன்றுகூடல் நடைபெற்றது.
சலாம் மில்லத் தியன்ஸ் எனும் தொனிப் பொருளில் நடைபெற்ற பாடசாலையின் பழைய மாணவிகளின் ஒன்று கூடலில், பழைய மாணவிகள் வரவேற்கப்பட்டு
காலை கூட்டம் நடைபெற்றது.
காலை கூட்டத்துக்கு பாடசாலையின் முன்னாள் அதிபர் திருமதி உதுமா சாஹிப் தலைமை வகித்தார்.
பழைய மாணவிகள் தாம் பாடசாலையில் கல்வி கற்ற பழைய வகுப்புகளுக்கு சென்று தனது அப்போதைய வகுப்பை ஞாபகப்படுத்திக் கொண்டனர்.
இதன் போது அவர்களுக்கு அன்று கற்பித்த ஆசிரியர்களும் பழைய நினைவுகளை மீட்டனர்;.
பாடசாலை ஒன்று கூடல் மண்டபத்தில் ஒன்று கூடிய பழைய மாணவிகள் முன்னிலையில் தற்போதைய அதிபர் திருமதி ஜெசிமா முசம்மில் பாடசாலையில் தற்போதைய நிலைமை கல்வி
அடைவு மட்டத்தின் முன்னேற்றம் எதிர்காலத்தின் தேவைப்பாடுகள் போன்ற விபரங்களை எடுத்துக் கூறினார்.
பாடசாலை முன்னேற்றத்திற்காக பழைய மாணவிகளின் ஒத்துழைப்புக்களும் உதவியும் தேவைப்படுவதாகவும் அதிபர் குறிப்பிட்டார்