மட்டக்களப்பு காத்தான்குடியில் சமுர்த்தி வீட்டுத் தோட்ட அறுவடை நிகழ்வு..

0
174

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவிலிலுள்ள, காத்தான்குடி 165பி கிராம உத்தியோகத்தர் பிரிவில், சமுர்த்தி வீட்டுத் தோட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்பட்ட பூசனிக்காய் அறுவடை செய்யும் நிகழ்வு இடம்பெற்றது.


காத்தான்குடி பிரதேச செயலாளர் உதய சிறீதர் அறுவடையை ஆரம்பித்து வைத்தார்.
சமுர்த்தி பயனாளியான திருமதி ஏ.எல்.ரசீதாவின் வீட்டில் மேற் கொள்ளப்பட்ட வீட்டுத் தோட்டத்தில் பூசனிக்காய் உற்பத்தி செய்யப்பட்டது.


இதன் போது பப்பாளிப்பழம் அறுவடையும் இடம் பெற்றது.
காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி பத்மா ஜெயராஜ் உட்பட முகாமையாளர்கள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள். மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.