மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலகத்தில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று நடைபெற்றது.
இலங்கை பாதுகாப்புப் படையின் கிழக்கு கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்னவின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மற்றும் பொலநறுவை மாவட்டங்களுக்கு தலைமைத்துவம் வகிக்கும் 232 ஆவது காலால் படை பிரிகேட்டின் மேஜர் ஜெனரல் நிலன்த பிரேமரத்னவின் மேற்பார்வையின் கீழ் கருத்தரங்கு இடம்பெற்றது. இதில் கல்குடா வலயத்திற்குட்பட்ட திகிலிவெட்டை மற்றும் புலிபாய்ந்த கல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைகளைச் சேர்ந்த 150 மாணவர்கள் பங்குபற்றினர்.
உலகலாவிய ரீதியில் ஆசிய கண்டத்தில் இலங்கை ஒரு முக்கிய போதைப் பொருள் மையமாக உள்ளது.
இதனால் நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கப் போகும் இளைஞர் யுவதிகளை போதைப் பொருளில் இருந்து விடுவித்து வளமான நாட்டை உருவாக்கும் நோக்கில் இவ் விழிப்புணர்வு செயலமர்வு இடம்பெற்றது.
இதன்போது தேசிய போதைப் பொருள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் பி.தினேஸ் கலந்து கொண்டு விரிவுரையாற்றினார்.
நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் ச.யோகராசா, பிரிகேடியர் அஜித் புஸ்பகுமார, போதைப் பொருள் கட்டுப்பாட்டு புணர்வாழ்வு இணைப்பாளர் லெப்ரினட் கேணல் சந்திக்க எகெலபொல, 232 ஆவது காலால் படை சிவில் இணைப்பாளர் இந்துனில் பாலசூரிய ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
Home கிழக்கு செய்திகள் மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலகத்தில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு இடம்பெற்றது